ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த கேசவன். அவர், உழவர் சந்தை பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடி வாரச்சந்தையில் 8 ஆயிரம் ரூபாய்க்கு காளை மாட்டை விலைக்கு வாங்கி உள்ளார்.
மாட்டிற்கு கணேசன் என பெயர் வைத்து தனது வீட்டில் ஒரு பிள்ளை போல் வளர்த்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உயிரிழந்தது. உயிரிழந்த மாட்டை தனது சொந்த இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.

மாட்டின் உரிமையாளர்
மாடு உயிரிழந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் மாட்டின் புகைப்படத்துடன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி என பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.

ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
மேலும் தனது கடையில் மாட்டின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வீட்டில் வளர்த்த மாடு உயிரிழந்ததை அனுசரிக்கும் வகையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.