முகப்பு /ராமநாதபுரம் /

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

X
பரமக்குடியில்

பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்

Ramanathapuram | பரமக்குடியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும், பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று நபர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்களையும், போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், பெண் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனவும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram