ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் இணைந்து போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் பொங்கல் பண்டிகைகொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவ பொங்கல், பாரம்பரிய பொங்கல் என பள்ளிகள், கல்லூரிகளில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர், மாணவர்கள், மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து பாரம்பரிய பொங்கல் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி சட்டைகள் மற்றும் சிறுமிகள் பட்டு பாவாடை உடைகள் அணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை இன்னும் அழகாக்கினர்.
“சீசன் துணிக்கடைகளில் போதிய வியாபாரம் இல்லை..” ராமேஸ்வரத்தில் வியாபாரிகள் வேதனை..
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram