ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குருவிக்கார சமூகமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகள் குருவிக்காரர் தெரு என்று அழைக்கப்படுகிறது. படிப்பறிவின்றி இம்மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், இம்மக்கள், தற்போது, குருவிக்காரர் சமூக குழந்தைகள் பலர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், குருவிக்காரர் என்று ஜாதிச்சான்று வழங்கக்கோரி ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏராளமான குருவிக்காரர் சமூக மக்கள் ஒன்று திரண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, கோட்டாட்சியர் கோபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனுவில், தற்போது நாராளுமன்றத்தில் நரிக்குறவர் குருவிக்காரர், காட்டுநாயக்கர், கணிக்கர், மலைக்குறவர், மற்றும் பல பழங்குடியின சமூகங்களுக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்குவதற்கு சட்ட இயற்றப்பட்டதன் அடிப்படையில், தமிழக அரசும் வழங்கிட சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : "பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் மீன்" கிளி மீன் பற்றிய சுவாரஸ்யங்கள்!
இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிக்கார சமூக மக்களுக்கு குருவிக்காரர் என்று ஜாதிசான்று வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram