ராமேஸ்வரத்தில் செயல்படும் மண்ணெண்ணெய் பங்கில் முறையாக மண்ணெண்ணெய் வழங்குவது இல்லை என்றும், மண்ணெண்ணெய் ஊற்றும் தேதி குறிப்பிடப்படுவது இல்லை என்றும், கால் லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் மூன்று லிட்டர் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் மண்ணெண்ணெய் பங்கில் மாதந்தோறும் 6,000-திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசால் ஊற்றப்படும் மண்ணெண்ணெய் வாங்கிவருகின்றனர். விறகு அடுப்பின் மூலம் சமைப்பவர்கள் இந்த மண்ணெண்ணெயைப் பயன்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மண்ணெண்ணெய் பங்கில் முறையாக மண்ணெண்ணெய் ஊற்றுவது இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பேசிய பொதுமக்கள், ‘மாதந்தோறும் மண்ணெண்ணெய் ஊற்றும் தேதி குறிப்பிடப்படுவது இல்லை. அவர்களின் விருப்பம்போல மாதத்தின் இறுதி நாட்களில் எதாவது நாட்கள் திறந்து மண்ணெண்ணெய் பங்கிற்கு அருகில் உள்ளவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் விநியோகம் செய்கின்றனர்.
மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் தகவலறிந்து வருவதற்குள் மண்ணெண்ணெய் முடிந்துவிட்டதாக தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர். 6,000 பேரில் 60 பேருக்கு கூட மண்ணெண்ணெய் முழுமையாக வழங்கப்படுவது இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பொதுமக்களுக்கு கால் லிட்டர் அளவு மண்ணெண்ணெய் மட்டுமே ஊற்றுகின்றனர். ஆனால் மூன்று லிட்டர் வாங்கியதாக தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. பங்க் முழுவதும் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது .
விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றி விழிப்புணர்வு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram