ராமநாதபுரத்தில் நேரு யுவகேந்திர அமைப்பு சார்பில் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரி கூட்டரங்கில் 13 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்ட ஓவிய போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திர மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் , செய்யது அம்மாள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் 13 கல்லூரியை சேர்ந்த 577 மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.இதில் ஓவிய போட்டியில் நாட்டின் ஒன்றுமை குறித்து ஓவியம் வரையப்பட்டது.
மேலும் படிக்க: சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!
இதுபோன்று இளையோர்களுக்கான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைபோட்டி, போன்ற போட்டிகள் நடைபெற்று, பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில்,மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர்.இதைதொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கோப்பைகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram