ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு கலை கல்லூரியாக உள்ள முதுகுளத்தூர், கடலாடி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி நாள் (27-7-22) என்று கல்லூரி முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைனில் நடந்து வருகின்றது. மேலும், இந்த கல்லூரிகளில், 2022-23ம் கல்வியாண்டில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.காம் வணிகவியல் என 5 பிரிவுகளில் சேர்ந்து படிக்க
விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 20 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ. தோ்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இம்மாதம் 22 ஆம் தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியானதால் விண்ணப்ப பதிவு 27 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டிட்ருந்தது.
இதையடுத்து, கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாள் என முதுகுளத்தூர், கடலாடி அரசு கல்லூரி முதல்வா் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.