பரமக்குடி அருகே தெய்வேந்திரநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெய்வேந்திரநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 16 மாணவர்கள், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளிக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் ஆறு மாதங்களாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் அங்கன்வாடி மையத்தில் கல்வி பயின்று வந்தனர். மேலும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram