பரமக்குடியில் உள்ள அக்கிரமேசி கிராமம் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இரண்டு இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த இருளன் மற்றும் அவரது நண்பர்கள் அக்கிரமேசி கிராமத்தில் உள்ள மதுபானக்கடைக்கு சென்று உள்ளனர். இந்நிலையில், அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இருளன் தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.
மேலும், மதுபானக்கடையின் வெளியே வந்தவுடன் அடையாளம் தெரியாத சிலர் அரிவாளால் தாக்கி இருசக்கர வாகனத்தினை தீவைத்து எரித்துள்ளனர்.
இதில், கார்த்திக் மற்றும் அதியமான் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் நயினார்கோவில் மற்றும் சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காமன்கோட்டை மற்றும் அக்கிரமேசி கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram