ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் இந்தாண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகி சாவியானது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 4 மாதங்களாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் நிவாரணம் ஏதும் வழங்கபடாததால் (ஏப்ரல் 17 )ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் மாவட்ட வருவாய் அலுவலர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பின்னர் போக்குவரத்து பாதிப்பினைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram