பரமக்குடி எமனேஸ்வரத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரத்தில் மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சௌராஷ்ட்ராவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள கலாச்சார உறவுகள் குறித்தும், ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற இருக்கும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்து உறைக்கப்பட்டது.
இதையும் படிங்க : ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பால் திடீரென உயிரிழந்த பன்றிகள்.. ராசிபுரத்தில் பரபரப்பு..
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குஜராத் சுற்றுலாத்துறை அமைச்சர் முலுபாய் பேரா மற்றும் குஜராத் அரசின் பொது நிறுவனங்களின் ஆணையாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram