ராமேஸ்வரம் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோரும் வருகை தருகின்றனர். ராமேஸ்வரம் அருகில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்க கூடிய தனுஷ்கோடி கடற்கரை பகுதியின் அழகை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்,
இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் நீண்ட தூரம் கடற்கரை பகுதியாக இருப்பதால் இந்தப் பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் உறவினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், கடலில் குளித்தும் மகிழ்ந்து அழகை ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள், உள்ளிட்ட உணவுப் பொட்டலங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு வந்து இங்கு சாப்பிட்டுவிட்டு அந்த பிளாஸ்டிக் கழிவுகளை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் விட்டுச் செல்கின்றனர், இதனால் இந்த பிளாஸ்டிக் ஆனது கடலில் கலந்து விடுகின்றன,
பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடலில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் உயிர் இழந்து வருகிறது ,
கடந்த வருடங்களில் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதையும் நாம் பார்த்து வருகிறோம், இந்த சூழலில் கடல் வளம், வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டும், வனத்துறை சார்பில் தனுஷ்கொடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடிகள் அமைத்து தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் பாலித்தின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர்
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்பு அந்த பகுதியில் சுற்றுலா பயணிகளின் வானங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கும் விதமாக இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் , அதேபோல நான்கு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என வசூலிக்க தொடங்கினர்.
இந்த வசூல் தொடங்கிய நாள் முதல் தனுஸ்கோடி வரும் சுற்றுலா பயணிகளிடம் எந்த நோக்கத்திற்காக சுங்கச் சாவடி அமைத்ததோ அதை விட்டுவிட்டு தற்போது கட்டணங்கள் வசூலிப்பதில் மட்டுமே வனத் துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு வனத்துறை சார்பில் எந்த நோக்கத்திற்காக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதோ அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Plastic pollution, Ramanathapuram, Rameshwaram