ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலம் என்பதால் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், அமாவாசை, விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோவில் எதிரே உள்ள அக்னி தீர்த்தம் கடற்கரையில் புனித நீராடி விட்டு தங்களுடைய முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம், வைத்து தர்ப்பணம் செய்வது ஐதீகம்.
இதனைத்தொடர்ந்து, வைகாசி மாதம் அமாவாசையை மற்றும் கோடை விடுமுறை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்தம் கடற்கரையில் புனித நீராடினர். தொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு சுவாமி-அம்பாளை தரிசனம் செய்து சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம், பாம்பன் சாலை பாலம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram