ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள குந்துகால் கடற்கரையில், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குந்துகால் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அரியவகை மீன் இனங்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கி அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதில் பெரும்பாலும் பேத்தைமீன், குமுளா, பாறை, சிரையா போன்ற மீன்கள் அதிகம் இருந்தன.
இதையடுத்து, காலநிலை மாற்றத்தால் மீன்கள் இறந்து கரை ஒதுங்குகிறதா, பாசிகளுக்கு இடையே சிக்கி மூச்சுத்திணறலால் இறந்ததா, நாட்டுப்படகில் இருந்து கழிவுகள் கடலில் கலந்து இறந்து கரை ஒதுங்குகிறதா என்ற கோணத்தில் மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிபோகி ஆய்வுக்கு மாதிரிகளை எடுத்து சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram