ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வள்ளிமாடன் கிராமத்தில் விவசாயம் செய்து வந்த இடத்திற்கு பட்டா கேட்டு 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி அடுத்த குதக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த வள்ளிமாடன் வலசை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு விவசாயம் செய்துகொள்ள அரசு சார்பில் 11 ஹெக்டரில் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கிய அந்த இடத்தில் தற்போது வரையிலும் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து, அதற்கான வரிகள் செலுத்தி வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். ஆனால் நிலம் கொடுக்கப்பட்டதில் இருந்து அதற்கான பட்டா அப்பகுதி மக்களுக்கு வழங்கவில்லை.
இந்நிலையில், விவசாயம் செய்து வந்த இடம் உள்ள பகுதியின் அருகே அரசு சட்டக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சில நபர்கள் விவசாய நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram