முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பபெறக்கோரி சாலை மறியல் போராட்டம்

ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்பபெறக்கோரி சாலை மறியல் போராட்டம்

X
சிஐடியு

சிஐடியு போராட்டம்

Ramanathapuram News | ராமநாதபுரத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிராக சிஐடியூ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி சிஐடியூ ஆட்டோ, அரசுப் போக்குவரத்து, சாலை போக்குவரத்து சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ, சாலைப் போக்குவரத்து, அரசுப் போக்குவரத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து பரமகுடி, தொண்டி, சிக்கல், பார்த்திபனூர், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு‌பகுதியாக மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி ராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அவதூறு.. ஆளுநரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை மறித்து மத்திய அரசைக் கண்டித்து கண்டன  முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram