ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இட்டுச்செல்லும் முட்டைகளை வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு, முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொறிக்கும் பொறிப்பகமானது முகுந்தராயன் சத்திரம் அருகே உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆமை குஞ்சுகள் கடற்கரையில் முட்டையிடுவது வனத்துறை அதிகாரிகள் சேகரித்து பாதுகாத்து, ஆமைகுஞ்சுகளை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் குஞ்சு பொறிப்பகத்தில் பொறிக்கப்பட்ட 335 ஆமை குஞ்சுகளை மலர்தூவி கடலில் விட்டனர். அதிகாலை 5 மணிமுதல் 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலுடன் வனத்துறை அதிகாரிகள், தனுஷ்கோடி கடற்பகுதியில் 5 இடங்களில், 665 ஆமை முட்டைகளை சேகரித்து பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கடலில் விடப்பட்ட ஆமைகுஞ்சுகள் தத்தி தத்தி கடலுக்குள் சென்றதை அங்கிருந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram