பரமக்குடியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரருக்கு, சேதுசீமை பட்டாளம் பகுதியைச் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து வரவேற்பு கொடுத்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கடந்த 2004-ம் ஆண்டு ராணுவப்பணியில் சேர்ந்து பல்வேறு இடங்களில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்து ஹவில்தாராக பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்றி பணியை நிறைவு செய்து ஊர் திரும்பியவரை பரமக்குடி ரயில்வே நிலையத்தில் இருந்து வீடு வரை மேளதாளங்கள் முழங்க பரமக்குடி சேதுசீமை பட்டாளம் என்ற முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் விமர்சையாக வரவேற்றனர்.
பணி ஓய்வு பெற்று பரமக்குடிக்கு வருகை தந்த சிவக்குமாருக்கு மாலை, சால்வை அணிவித்து, தாரை தப்பட்டை முழங்க வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram