ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த வேதாளை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல்அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல்அட்டை மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படுத்திய, அலுமினிய பாத்திரங்கள், ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்தளவு பதப்படுத்தியதால் ஒரு கிலோ ஐந்தாயிரம் ரூபாய் வரை செல்கிறது என்றும், இன்னும் பதப்படுத்தினால் ஒரு கிலோ பத்தாயிரம் வரை செல்லும் என்றும் வனத்துறையினர் கூறினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram