ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கரையில் அமைந்துள்ளது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வாழவந்தான் அம்மன் கோவில். நெல்மடூர் கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் விளையும், நெல், பருத்தி, மிளகாய் போன்றவை கொண்டு சுவாமிக்கு படையல் வைத்து வழிபட்டு வந்தனர்.
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் முதலாம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை போன்ற யாகபூஜை நடத்தப்பட்டது. வாழவந்தான் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க புனிதநீர் கொண்டுவந்து கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் நெல்மடூர் கிராமத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Religion18