ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராம்நகர் மற்றும் வெங்கடேஸ்வரா காலனியை சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் மற்றும் கோகுல், இவர்கள் இருவரும் முதுகுளத்தூர் சாலையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு பரமக்குடி நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில், ஆட்டோ பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி என்ற கிராமத்தின் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோ மீது எதிரே வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் கோகுல் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எமனேஸ்வரன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram