ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த சேரான்கோட்டை கடற்கரையில் 14 கிலோ கஞ்சா பொட்டலம் கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டமானது இலங்கைக்கு அருகில் இருப்பதால் இங்கிருந்து தங்கம், மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா போன்ற பொருட்கள் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாளை ஆகிய கடற்கரை பகுதிகளில் இருந்து கடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் கஞ்சா பொட்டலம் போன்று ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக துறைமுக காவல் துறையினருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு சென்ற துறைமுக காவல்துறையினர், கரை ஒதுங்கிய பொட்டலத்தை பிரித்து பார்த்ததில் கடல்நீரில் ஊறிய நிலையில் 14 கிலோ கஞ்சா இருந்ததால் அதை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்த கஞ்சா பொட்டலமானது இலங்கைக்கு கடத்தும்போது கடலில் விழுந்து மூன்று நாட்களாக கடலில் மிதந்து வந்து சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி இருக்காலம் என சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Rameshwaram