முகப்பு /ராமநாதபுரம் /

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... ராமநாதபுரத்தில் உற்சாகத்துடன் தேர்வெழுதிய மாணவ-மாணவிகள்..! அதிகாரிகள் ஆய்வு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... ராமநாதபுரத்தில் உற்சாகத்துடன் தேர்வெழுதிய மாணவ-மாணவிகள்..! அதிகாரிகள் ஆய்வு

X
பன்னிரெண்டாம்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு

Ramanathapuram District |ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்றது. உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்றது. உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முதல் தேர்வு தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 37அரசு உதவி பெறும் பள்ளிகள் 52 மெட்ரிக் பள்ளிகள், ஒரு மாதிரி பள்ளி என 160 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் 7,903 மாணவர்களும், 8,147 மாணவிகளும் என மொத்தம் 16,077 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களுள் 88 மாற்றுத்திறனாளிகளும், 269 தனித்தேர்வர்களும் அடங்குவர்.

Read More : முதியோர் ஓய்வூதியத்தை முறையாக வழங்ககோரி ராமநாதபுரம்  ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்..!

இந்நிலையில், தேர்வு மையத்தில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டர். மேலும், பறக்கும் படை அதிகாரிகள், தலைமை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர் என 1,025 நபர்கள் நியமிக்கப்பட்டு தேர்வை கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Ramanathapuram