ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 4.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறையினர் கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலாய்க்குடி கிராமத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த லாரியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினர் சோதனை செய்ததில் 112 பிளாஸ்டிக் பைகளில் 40 கிலோ எடை உடைய 4,480 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும், ரேஷன் அரிசியை கடத்திய மேலாய்க்குடியைச் சேர்ந்த பழனிமுருகன் மற்றும் கடலாடியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Ramanathapuram