முகப்பு /புதுக்கோட்டை /

மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா.. சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி..

மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா.. சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி..

X
மெய்க்கண்ணுடையாள்

மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா

Viralimalai Meikkannudayal Temple | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள் பதிவு செய்திருந்த நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் 377 காளைகள் மட்டுமே களம் கண்டன. இதில் 167 மாடுபிடி வீரர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் 21 பேர் காயமடைந்தனர் இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா

முன்னதாக கோவில் காளைகள் அனைத்தும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் பாபு தலைமையில் 31 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசல் அனுப்பப்பட்டன.

இதையும் படிங்க : சர்வதேச நடன தினம்.. நடனத்தின் சிறப்பை விளக்கும் செங்கல்பட்டு கலைஞர்!

போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பண முடிப்பு, சைக்கிள், எல்இடி டிவி, மின் விசிறி, சில்வர் அண்டா, வெள்ளி காசு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிலையில், பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திடலின் இருபுறமும் திரண்டு நின்று போட்டியை கண்டு ரசித்தனர்.

மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 2 மருத்துவர்கள் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர். இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் திடலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி காயத்ரி தலைமையில் போலீஸார், ஊர்காவல்படையினர் என மொத்தம் 132 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

First published:

Tags: Local News, Pudukkottai