முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை ராஜகிரி குளவாய்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...

புதுக்கோட்டை ராஜகிரி குளவாய்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...

X
களத்தில்

களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

Pudhukottai News| புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜகிரி குளவாய்பட்டி கூத்தாண்டம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

விராலிமலை அருகே உள்ள ராஜகிரி குளவாய்பட்டி ஜல்லிக்கட்டில் 700 காளைகள் காளைகளும் 200 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜகிரி குளவாய்பட்டி கூத்தாண்டம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்காண பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வாகனங்கள் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

First published:

Tags: Local News, Pudukottai