புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, கறம்பக்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வெள்ளனூர் ஊராட்சி ரெங்கம்மாள் சத்திரம் கிராமத்தில் வசிக்கும் 95 நரிக்குறவர் சமூக மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவரது விருப்ப நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா பத்தாயிரம் மதிப்பீட்டில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை வழங்கினார். மேலும், தலா 5,000 ரூபாய் வீதம் பாசி உற்பத்தி செய்து கடைகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக துளசி, மணி பாசி செய்வதற்கான ஒரு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்களையும் வழங்கினார்.
மேலும், காமராஜபுரத்தை சேர்ந்த 51 நபர்களுக்கு 5,000 ரூபாய் மதிப்பீட்டில் வாழ்வாதாரத்திற்கான பொருட்களை ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சித் தலைவரிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்ட நரிக்குறவர் சமூக மக்கள், துளசி மணி, பாசி மணியை ஆட்சியருக்கு அணிவித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
சுட்டெரிக்கும் கோடை வெயில் : புதுக்கோட்டையில் தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai