முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை - உங்கள் ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை - உங்கள் ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

 மின் தடை

மின் தடை

Pudukkottai district | புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான்நல்லூர் துணை மின் நிலையம், குளத்தூர் துணை மின் நிலையம் மற்றும் புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையம் ஆகியவைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (18-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

தொண்டைமான்நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லீம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று கீரனூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

Must Read : அதியசம் நிறைந்த காஞ்சிபுரம் நடவாவி கிணறு - 48 படிகள், கிணற்றுக்குள் 12 தூண்களைன் கொண்ட அழகிய மண்டபம்!

மேலும், புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீழ ராஜ வீதி, தெற்கு 2ஆம் வீதி, தெற்கு 3ஆம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், காந்திநகர், உசிலங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்தி நகர், மேட்டுப்பட்டி, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர், கம்பன் நகர் தென்புறம் ஆகிய பகுதிகளிலும நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் அறிவித்துள்ளார். எனவே, இப்பகுதி பொதுமக்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai