புதுக்கோட்டை நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (21-12-2023) மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சையது அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின்தடை பகுதிகள்:
புதுக்கோட்டை நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும், கீழராஜ வீதி, தெற்கு 2ஆம் வீதி, தெற்கு 3ஆம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், காந்தி நகர், உசிலங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்திநகர்,
Must Read : தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
மேட்டுப்பட்டி, கலீப்நகர், மருப்பிணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பாநகர், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் மற்றும் கம்பன் நகர் தென்புறம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai