முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

மின் தடை 

மின் தடை 

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்  காரணமாக நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள ஆதனக்கோட்டை, புதுப்பட்டி உள்ளிட்ட சில துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (24-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் தடை பகுதிகள்:

ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப்பட்டி,

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கந்தர்வகோட்டை, அக்கட்சி பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான்பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசு பட்டி, மெய்குடிபட்டி, ஆத்தியடி பட்டி, வெள்ளாள விடுதி மற்றும் சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

இதேபோல குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும், குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, தெம்மவூர், செங்களூர், வாலியம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai