இலுப்பூர் இரட்டை பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் செளராஷ்டிரா தெருவில் அமைந்துள்ளது இரட்டை பிள்ளையார் கோவில். அப்பகுதியில் புகழ்பெற்ற இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த கோயில் விழா கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லஷ்மி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கங்கை, காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் பட்டர்கள் சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai