முகப்பு /புதுக்கோட்டை /

குதிரை, மாட்டு வண்டி பந்தயங்களால் களைகட்டிய ஆலங்குடி..

குதிரை, மாட்டு வண்டி பந்தயங்களால் களைகட்டிய ஆலங்குடி..

X
குதிரை,

குதிரை, மாட்டு வண்டி பந்தயங்களால் களைகட்டிய ஆலங்குடி

Pudukkottai News | ஆலங்குடியில் கோலாகலமாக நடைபெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சாலையில் வீரமாகாளியம்மன் கோயிலில் 65ம் ஆண்டாக பங்குனி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு, பூஞ்சிட்டு மாடு என 4 பிரிவுகளில் நடைபெற்றது. இதேபோல் குதிரை வண்டி பந்தயத்தில் பெரிய குதிரை, நடு குதிரை என 2 பிரிவுகளிலும் பந்தயம் நடைபெற்றது.‌

இந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்களில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 ஜோடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டி பந்தயத்தில் 14 ஜோடி குதிரை வண்டிகளும் பங்கேற்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் சாலைகளில் சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகளையும் அதேபோல் வண்டிகள் சரியான பாதையில் செல்ல சாரதிகள் இணையாக ஓடியதையும் சாலையின் இரு புறங்களிலும் நின்ற ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர். விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ரூ.35,000 வரையிலான ரொக்கப் பரிசுகள் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Pudukkottai