புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவேலி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வரும்முன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம் வட்டார மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
இந்த முகாமில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவம், ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, சித்த மருத்துவம், கண் மருத்துவம், கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் பரிசோதனை, பல் மருத்துவம், அனைத்து ஆய்வக பரிசோதனை, மன நல மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் பொது மக்களுக்கு செய்யப்பட்டன. மேலும் சில பேருக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், ‘வரும் முன் காப்போம் மருத்துவத் திட்டம் கிராமத்தில் உள்ள மக்களுக்கும் மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது சில ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தொலைவில் இருக்கும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை மற்றும் அவர்களின் உடல் நலத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யவும், அதிக தொலைவு கடந்து மக்கள் சிலர் செல்ல முடியாத நிலையில் இருப்பர்.
குரூப்புல டூப்.. புதுக்கோட்டை கீரனூரில் கன்றுக் குட்டிகளை அடக்கிய காளையர்கள்...
செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai