முகப்பு /புதுக்கோட்டை /

கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி மீன்களை அள்ளிச் சென்ற புதுக்கோட்டை மக்கள்..! 

கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி மீன்களை அள்ளிச் சென்ற புதுக்கோட்டை மக்கள்..! 

X
மீன்களை

மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழாவானது அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். 

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை திருமயம் பகுதியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் போட்டி போட்டு கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி ஆகிய மீன்களை அள்ளிச் சென்ற ஊர் மக்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழாவானது அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் மீன்பிடித் திருவிழா பெரிய விழாவாக காலம் காலமாக நடைபெற்று வருவது வழக்கம் .அதாவது கோடை காலத்தில் கண்மாய்களில் தண்ணீர் வற்றியதும் கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த மீன் பிடித்த திருவிழாவை தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பனையப்பட்டியில் உள்ள கண்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்களின் வெள்ளை விடுதல் நிகழ்வுக்கு பின் கோலாகலமாக மீன்பிடி திருவிழா தொடங்கியது. பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான ஊத்த, பரி, வலை, உள்ளிடவை வைத்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து மக்கள்ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி கெண்டை, கெளுத்தி ,விரால் ,ஜிலேபி, மீசை கெளுத்தி உள்ளிட்ட மீன்களை லாவகமாக பிடித்தனர். இதில் ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என‌ அனைவரும் திரண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

    First published:

    Tags: Local News, Pudukkottai