முகப்பு /புதுக்கோட்டை /

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கறம்பக்குடி சிவன் கோவில்.. குடமுழுக்கு எப்போது?

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கறம்பக்குடி சிவன் கோவில்.. குடமுழுக்கு எப்போது?

X
கறம்பக்குடி

கறம்பக்குடி சிவன் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்

Pudukkottai Karambakudi Sivan Temple | புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது அனந்தேஸ்வரமுடையார் உடனுறை மங்களாம்பிகை திருக்கோயில் .

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில்,   பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவிலை உடனடியாக சீரமைத்து, புதுப்பித்து குடமுழுக்கு நடத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ளது மங்களாம்பிகை உடனுறை அனந்தேஸ்வரமுடையார் திருக்கோவில். இந்த சிவன் கோவில் 700 ஆண்டுகளுக்கும் முந்தைய கோவில் என   வரலாறு கூறுகிறது.

இக்கோவிலில் ஈசன், அம்பிகை மட்டுமின்றி துர்க்கை, கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன. நூற்றாண்டுகளை கடந்த இந்தக் கோவிலை பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டதால் தற்போது கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

கறம்பக்குடி சிவன் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலை சீரமைத்து புணரமைக்கும் பணிகளில் பக்தர்கள் பலரும் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறங்கினர்..

ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அப்பணியினை செய்து முடிக்க முடியாமல் போனது.

மேலும் படிக்க:  புதுக்கோட்டையில் ஒரு புதுமையான நர்சரி.. அப்படி என்ன ஸ்பெஷல்?

பல நூறு ஆண்டுகள் தொண்மையான இந்த ஆலயத்திற்கு உள்ளே நுழைய முடியாமல் பக்தர்கள் வசதிக்காக தற்போது சிலைகளை வளாகத்தின் உள்ளே சிறிய கூரை கொட்டகை ஒன்று அமைத்து அதன் உள்ளே வைத்து வழிபட்டு வருகின்றனர்.

கறம்பக்குடி சிவன் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்

பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் இங்கு வந்து வழிபட பெண்கள் உட்பட பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோவில் இல்லா ஊரில் வாழ வேண்டாம் என்பது முன்னோரின் முதுமொழி ஆகும், ஆனால், ஊரில் இருக்கும் கோவிலை வழிபட முடியாமல் கறம்பக்குடி பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:  முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..

தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை உடனடியாக புணரமைத்து குடமுழுக்கு செய்து பக்தர்கள் வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலமாக பக்தர்களால் புகழப்படும் இத்திருத்தலம் கறம்பக்குடி நகரின் மையப் பகுதியில் பெரிய கருப்பர் கோவில் அருகே அமைந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கோவிலிற்கு புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணித்து சென்றடையலாம்.புதுக்கோட்டையில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தொன்மையான திருத்தலம்.

First published:

Tags: Local News, Pudukkottai