புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாந்தாரம்மன் கோவில் தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை நகர்புரத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சாந்தாரம்மன் ஆலய தெப்பத் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற இந்த ஆண்டு விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த தெப்பத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து வரப்பட்டார். இதனைத்தொடர்ந்து தேரானது பல்லவன் குளத்தில் நான்கு கரை வழியாக சுற்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai