புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம்நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கிராம பெண்கள் 7 நாட்கள் விரதம் இருந்து தொட்டியில் நவதானிய விதைகளை போட்டு வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், அதனை தலையில் சுமந்தவாறு கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சுற்றி பாரம்பரிய முறைப்படி கும்மி அடித்தும், குலவையிட்டும் வான வேடிக்கைகள் முழங்க மேளதாளங்களுடன் கோவில் வந்தடைந்தனர்.
இதையும் படிங்க : அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
இவ்வாறு முளைப்பாரி எடுத்து நல்ல மழை பொழிவு வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் ஸ்ரீ வேங்கடாஜலபதியை வழிபட்டுச் சென்றனர். இந்த முளைப்பாரி எடுப்பு விழாவில் ஆலங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வேங்கடாஜலபதி அருள் பெற்று சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai, Religion18