புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மஞ்சக்குப்பம் புத்துப்பட்டு கிராமம் அருகே அமைந்துள்ள சித்திரக்கூடத்தில் ஆஞ்சநேயருக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் 19 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன ஸ்ரீ சீதா இராம லஷ்மன சமேத விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்யும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராமபுரம் ஸ்ரீமத் வாயுஷித்த ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், தனது திருக்கரங்களால் ப்ரதிஷ்டை செய்துவைத்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்தப் பிரதிஷ்டை விழாவில் வைணவர்கள், சிவனடியார்கள், அனுமன் தாஸர்கள், ஆன்மீகஅன்பர்கள், ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீராமர் லஷ்மணனை தன் தோளில் சுமந்து நிற்கும் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry