புதுச்சேரி மாநிலம் வைசியால் வீதியில் சாலை ஓரத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று இருந்தது. சாலை மற்றும் வாய்க்கால் விரிவுபடுத்தும் பணிக்காக அந்த மரத்தை வேரோடு வெட்டி எடுக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் மரத்தை வெட்டும்போது அந்த மரம் திடீரென சாலையில் விழுந்தது. இதில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிராக்டர் மற்றும்இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. பின்னர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனத்துறை, தீயணைப்புதுறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry