புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட மூர்த்தி புதுகுப்பம் மீனவ கிராமம் சமீப காலமாக புதுவையில் தவிர்க்க முடியாத சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இதேபோன்று கிருமாம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 40 கிலோ எடை உள்ள ஆமை ஒன்று கடலிலிருந்து கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய ஆமையை காவலர்கள் மணிவண்ணன் மற்றும் கலைமணி மீட்டு அந்த ஆமையை தூக்கிச் சென்று கடலில் மீண்டும் விட்டனர் இதைப் பார்த்த கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவலர்களின் மனிதாபிமான செயலுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pondicherry, Puducherry