புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான தீவனூர் ஸ்ரீசுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் தை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், யாகசாலை வேள்வியும், தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, அந்த கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அங்குசத்தை கையில் ஏந்தி வெள்ளை பட்டு உடுத்தி கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் உற்சவ மூர்த்தி எழுந்தருள ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry