புதுச்சேரி மாநிலம் முலக்குளம் பகுதியில் சாலையோரத்தில் 6 அடி ஆழம் கொண்ட வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் நாள்தோறும் இரவு பகல் பாராமல் பசு மாடுகள் நடமாடிக் கொண்டிருக்கும். இதில் ஒரு பசுமாடு இரவு நேரத்தில் நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக விழுந்து தவித்துக் கொண்டிருந்த பசு மாட்டை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பலராமன், நடராஜன், வசந்த், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பசுமாட்டின் உடம்பில் கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன் போராடி மீட்டனர். பசுமாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cow, Local News, Police Rescued, Puducherry