புதுச்சேரி அடுத்த நெய்குப்பி கிராமத்தில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயிலில் 7ம் ஆண்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் நெய்குப்பி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை அடுத்து ஏழாம் ஆண்டு திருத்தேரோட்ட நிகழ்ச்சியானது பால்குட ஊர்வலத்துடன் துவங்கியது.
இதனை தொடர்ந்து மாலை பொழுதில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்று தேர் முற்றத்தை அடைந்தது. தொடர்ந்து இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Local News, Puducherry