மகாவீர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோயிலில் ஒன்று கூடினர். கோயிலில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் மகாவீரர் சிலையுடன் தேர் பவனியும் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் புதுச்சேரியில் வாழும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணா சாலையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தேர் பவனியை தொடர்ந்து பஜனை பாடல்களை பாடிய படியும் பல்வேறு வாத்தியங்களை இசைத்தபடியும் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது ஜெயின் சமூகத்தினர் பாடல்களை பாடியும் நடனமாடியபடியும் சென்றனர். மேலும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுவையில் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mahaveer Jayanthi, Puducherry