காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது காதலை வெளிபடுத்த ரோஜாப்பூக்களை அளிப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால் ரோஜா பூக்களின் விலை எகிறியுள்ளது.
காதலர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு பூக்கள் சந்தையில் ரோஜா பூக்களில் விலை 4 மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ரோஜாக்களின் ஒரு கட்டு ரூ.150-இல் இருந்து ரூ.550 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு ரோஜா பூவின் விலை ரூ.10-இல் இருந்து ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரியிலும் இதே விலை தொடர்ந்து வருகிறது.
இதனை கேட்ட காதலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆனாலும், வேறு வழியின்றி காதலர்களுக்கு ரோஜா பூக்களை கொடுக்க வேண்டும் என ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry, Rose, Valentine's day