அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு செய்யப்படுகிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா இரு வாரங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.கவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதனையடுத்து, அந்த மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனையடுத்து, தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் எழுந்தன. முன்னதாக, 12 மணி நேர வேலை சட்டத்துக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் புதுச்சேரியில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ‘அரசுத் துறையில் பணியாற்றும் பெண்கள் வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வேலைக்கு வருவதற்கு பதிலாக 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும். அரசு துறையில் அமல்படுத்தினால் அதை தனியார் நிறுவனங்களும் பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். வெறிநாய் கடிக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட துணைநிலையில் ஆளுநர் தமிழிசை முதலமைச்சர் ரங்கசாமி கூட்டாக இதனை தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puducherry