புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விளக்குவதற்கான கூட்டம் விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி தலைமையில் மரக்காணத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளபடி சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும் இதுபோல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 12 கடல் நாட்டிகல் மைல் மேல்தான் சென்று மீன் பிடிக்க வேண்டும். மேலும் இந்த வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பனவற்றை விளக்கமாக மீனவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதனைக் கேட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள், ”நாங்கள் 12 நாட்டிகல் மைல் மேல் சென்று மீன்பிடிக்க முடியாது அவ்வாறு மீன் பிடிக்க சென்றால் மீனவர்களின் உயிருக்கும் மீன்பிடி சாதனங்களுக்கும் பெரும் அழிவு உண்டாகும். இதுமட்டுமல்ல உச்ச நீதிமன்றம் அறிவித்தது போல் காலை 8 மணிக்கு சென்று மதியம் 12 மணிக்குள் மீன் பிடித்துக் கொண்டு எங்களால் கரை திரும்ப முடியாது இதனால் எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
இந்த தொழில் நம்பி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் உள்ளது. மேலும் பல கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். அந்த சாதனங்களும் பயன்படுத்தாமல் பாதிக்கப்படும் உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்பினை முழுமையாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது வேண்டுமென்றால் ஒரு ஆண்டிற்கு தொடர்ந்து ஆறு மாதம் காலம் வரை நாங்கள் தொழில் செய்கிறோம் மற்ற மாதங்களில் மீன் பிடி தொழிலை நாங்களே தடை செய்து விடுகிறோம்” என்று அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
இதனை கேட்டு அதிகாரிகள் உங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் இதனை நாங்கள் எங்கள் மேல் அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கும் அனுப்பி வைப்போம். அதன்பிறகு அரசு கூறுவது போல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தனர் இதனைத் தொடர்ந்து கூட்டம் சுமூகமான முறையில் முடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் கடலோர காவல் படையினர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீனவ பஞ்சாயத்தார்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fisher man, Local News, Puducherry