முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி தன்வந்திரி பெருமாள் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

புதுச்சேரி தன்வந்திரி பெருமாள் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

X
புதுச்சேரி

புதுச்சேரி தன்வந்திரி பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

Puducherry News | புதுச்சேரி வானூர் வட்டம், குமளாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள தன்வந்திரி பெருமாள் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான வானூர் வட்டம், குமளாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பேசும் பெருமாள் ஆலய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பிணி போக்கும் ஸ்ரீதன்வந்திரி பெருமாள் பிரதிஷ்டையும், ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலய வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரி தன்வந்திரி பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

இதனைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மருத்துவப் பெருமாளாய் மஹா விஷ்ணுவின் மறு அவதாரமாக விளங்கும் பிணி போக்கும் ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry