புதுச்சேரி அரசின் இலவசங்கள் வேண்டாதவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்து கௌரவ குடும்ப அட்டைக்கு பதிவு செய்யும் நிகழ்வு குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் துறை அலுவலகத்தில் தொடங்கியது. இதில் பாஜக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று குடும்ப அட்டைகளை சரண்டர் செய்து கௌரவ குடும்ப அட்டைக்கு பதிவு செய்தனர்.
அப்போது துணை இயக்குனர் ரவிச்சந்திரனை பார்த்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொகுதி மக்களுக்கு ரேஷன் கார்டு தொடர்பாக பரிந்துரை செய்து அனுப்பினால் அதை ஏற்க மாட்டீர்களா? மக்களை உதாசீனப்படுத்துவது நியாயமா? அவர்கள் கொடுக்கும் மனுக்களை தூக்கி வீசுவதா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு குடும்ப அட்டை பெறுவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்துள்ளது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டி பேசினார்.
மேலும் ஒரு நாளைக்கு ரூ.50,000 லஞ்சம் பெறுவதாக புகார் வருகிறது எனவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை எச்சரித்தார். இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், “அமைச்சர்கள் கையப்பமிட்டு அனுப்பினால், உடனடியாக கையொப்பமிட்டு உடனே தர வேண்டுமா? என நீங்கள் கூறியதாக மக்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry