புதுச்சேரி நகரப்பகுதியான செஞ்சி சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது அந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து காரை விரட்டி பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் புஸ்சி வீதியில் காரை மடக்கி பிடித்து காரை ஓட்டி வந்தவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பது தெரியவந்தது. பின்னர் போக்குவரத்து போலீசார் புகழேந்தி மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மது அருந்தி உள்ளாரா? என்று பரிசோதனை செய்தனர். புதுச்சேரி நகரப்பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிய நபரை பொதுமக்கள்மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Puducherry